இன்றைய தேதியில் தமிழ்த்திரையுலகில் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம்.என்றால் அது லைகா தான்.
தாராளமாக செலவு செய்து தரமான படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் தமிழ்நாடு முதலமைச்சரின் கொரானா நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பதிலும் தாராளம் காட்டியிருக்கிறது.
இன்று லைகா நிறுவனம் சுபாஸ்கரன் சார்பாக அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம் தமிழ்க்குமரன், இயக்குநர் ராஜா சுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச் ரா ஆகியோர் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து 2 கோடிக்கான காசோலையை வழங்கினர்.
இந்த நிகழ்வின் போது நடிகர் தயாரிப்பாளரும் சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏ வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.