T. முருகானந்தம் Rockfort Entertainment தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்”படத்தின் மூலம் சிறந்த இயக்குநராக அடியெடுத்து வைத்திருக்கும் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் “குருதி ஆட்டம்” படத்தில் அதர்வா முரளி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “குருதி ஆட்டம்” படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. நாயகனுக்கு மட்டுமே இடம் என்கிற சம்பிரதாயத்தை மாற்றும் விதமாக “குருதி ஆட்டம்”முதல்பார்வையில் அதர்வா முரளி, குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷினிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்திருப்பது அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இது குறித்து, இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறியபோது, “ரசிகர்களுக்கு கதையின் கரு இரு கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டது என்பதை உணர்த்தவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டது. “குருதி ஆட்டம்” படம் ஒரு விபத்திற்கு பிறகு நாயகனுக்கும் ஒரு பெண்குழந்தைக்கும் ஏற்படும் உறவை, அவர்களது பயணத்தை கூறுவதாகும். ஆக்ஷன் திரில்லர் வகைப்படமாக இப்படம் இருந்தாலும் மிக அழுத்தமான செண்டிமெண்ட் இப்படத்தில் இருக்கும். இதனைச் சுற்றியே மொத்த கதையும் அமைக்கப்பட்டிருக்கும்..” என்றார்.
தவிர்க்க முடியாத காரணங்களினால் சிறிது காலம் தடைபட்டிருந்த குருதி ஆட்டத்தின் படப்பிடிப்பு, முதல் பார்வை வெளியிடப்பட்டதிலிருந்து சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு மதுரையில் முழு விச்சில் நடக்கவுள்ளது.
சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் பிரியா பவாணி சங்கர் நாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், ராதாரவி முக்கிய கதாப்பத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசையைப் பற்றி குறிப்பிட்ட ஸ்ரீ கணேஷ், “இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கும் அதிலும் பின்னணி இசை படத்திற்கு வேறொரு பரிமாணம் தந்து எல்லோரையும் கவரும்..” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
MKRP நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் R கண்ணன் தாயாரித்து இயக்கும் இன்னும் தலைப்பிடாத “Production no 3” படத்திலும் அதர்வா முரளி நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.