PGP எண்டர்பிரைசஸ் சார்பில் P.G.பிச்சைமணி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘துப்பாக்கியின் கதை’. விஜய் கந்தசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவநிஷாந்த் நாயகியாகவும் பெங்களூருவை சேர்ந்த நீருஷா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் டேனியல், ஆர்.எஸ்.சிவாஜி, ஜார்ஜ், மிப்புசாமி, இலங்கை நடிகர் லால்வீர்சிங் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்க சஞ்சனா மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹர்ஷா ஆகியோரும் இணைந்திருக்கின்றனர்.
சாய் பாஸ்கர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் "துப்பாக்கியின் கதை" யை மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். பழிவாங்கும் கதையம்சத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதோடு, எப்படி பழி வாங்குகிறார்கள் என்கிற விதத்தில் வித்தியாசம் காட்டி குடும்பத்தோடு பார்த்து மகிழத்தக்க அளவில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
”படத்தின் கதை உண்மையிலேயே ஒருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மையப்படுத்தி அதன் தாக்கத்தில் உருவானதுதான். படம் பார்க்கும்போது இந்த நிகழ்வு எங்கே.? யாருக்கு ? நடந்தது என்பதை ரசிகர்கள் நன்றாகவே தெரிந்து கொள்வார்கள்” என்கிறார் விஜய் கந்தசாமி.
துணை நடிகர் ஒருவரின் கழுத்தில் இருந்து செயினை பறித்துக் கொண்டு ஹீரோ ஓடுவது போலவும் அந்த நடிகர் கூச்சலிடுவது போலவும் யாருக்கும் தெரியாமல் கேமராவை மறைத்து வைத்து படமாக்கியபோது, அதை உண்மை என்று நினைத்த அங்கிருந்த பொதுஜனம் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஹீரோவை விரட்டிச் சென்று விபத்தில் சிக்கி ஒரே ரணகளமாகியிருக்கிறது. வேறு வழியில்லாமல், அவரது சிகிச்சைக்கான செலவையும் தயாரிப்பாளரே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் 2 பாடல் காட்சிகளில் ஒன்று வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது..
தயாரிப்பாளர் P.G.பிச்சைமணி அடிப்படையில் கட்டுமான தொழில் செய்து வரும் பில்டர் என்பதும் அவரது 10 வருட நண்பர் இயக்குநர் விஜய் கந்தசாமிக்காகப் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பதும் கூடுதல் தகவல்.
படத்தை வரும் டிசம்பரில் வெளியிட தீயாய் வேலைசெய்கிறது படக்குழு.