நந்திதா ஸ்வேதா தற்பொழுது ஐபிசி 376 என்கிற படத்தில் நடித்து வருகிறார். காவல்துறை அதிகாரியாக இதுவரை இல்லாத அளவிற்கு ஆக்ஷன் அதிரடிப்படமாக உருவாகி வரும் இந்தப்படத்தின் மூலம் இயக்கு நராக அறிமுகமாகிறார், ராம்குமார் சுப்பாராமன்.
ஐபிசி 376 பற்றி கூறிய இயக்குநர், “திருப்பங்கள், புலனாய்வு, நகைச்சுவை கலந்த வணிகரீதியிலான திரில்லர் படமாக இருக்கும். நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்சன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க சூப்பர் சுப்பராயன் மாஸ்டரின் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியிருக்கும். அவரும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய அதேநேரம், ஹீரோக்கள் பண்ண முடியாத கதை. இப்பொழுது, சமூக வலைதளங்களில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் தலைப்பைத் தேடும் போதே எது சம்பந்தமான கதை என்பதை ஊகித்து விடுவார்கள். ஆனாலும், என்ன கதை என்பதை ஊகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில், இது பெண்களைக் கொண்டாடும் படமாக இருக்கும்… என்றார்.
ராம்குமார் சுப்பாராமன், பாலசேகரன், பிரபு சாலமன் போன்ற இயக்கு நர்களிடம் பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தகராறு, அண்ணாத்துரை படங்களின் ஒளிப்பதிவாளர் k. தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் R. நிர்மல் படத் தொகுப்பைக் கவனிக்கிறார்.
96, ஜூங்கா, பென்சில் போன்ற படங்களை விநியோகம் செய்த S. பிரபாகர் ஐபிசி 376 படத்தைத் தயாரிக்கிறார். வி நியோகஸ்தர், திரையரங்குகளின் உரிமையாளர் என்று மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த இவர், இயக்கு நர் சொன்ன கதையை நம்பி, இந்தப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.