லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில், ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாக, விஷால் நடித்து வரும் 'அயோக்யா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் அரங்கில் படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான காட்சி கடந்த மூன்று நாட்களாக படம்பிடிக்கப்பட்டு வருகிறது. R.பார்த்திபன், ராதாரவி, கே எஸ் ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா ,சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட காட்சியாக இது உருவாகிவருகிறது.
படத்தின் முக்கிய காட்சி என்பதால் இக்காட்சி முழுவதும் நடிகர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும் , படத்தின் நாயகன் விஷால் மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு பகல் பாராமல் தூக்கத்தை மறந்து, நீதிமன்ற காட்சிகள் சிறப்பாக அமைய நடித்துக் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே, இந்த படத்திற்காக, மிடுக்கான ஒரு தோற்றத்திற்காக விஷால், அதிகம் மெனக்கெட்டுத் தன்னை மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இன்னும் இரண்டு பாடல்கள் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் வெளியிடும் திட்டத்துடன் படப்படிப்புக்குப் பிந்தைய வேலைகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.