பிரிக்கமுடியாதது எதுவோ..? அப்படி இன்றைய தமிழர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் தமிழனும்-தமிழ்சினிமாவும். அந்த அளவிற்கு நம் ஒவ்வொரு கொண்டாட்டங்களிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் தமிழ் சினிமா, தமிழர்களைக் கட்டிப்போடுகிறது. தேசமுழுவதும் (விடுமுறை தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில “போலிப்பகுத்தறிவுவாதி"களைத் தவிர) இன்று ஆயுத பூஜையையும் நாளை விஜயதசமியையும் வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விரைவில் வெளிவரயிருக்கும் இன்னும் இந்தப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படாத நிலையில் அனைத்து தொழிலாளத்தோழமைகளும் பயன்பெறும் வகையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை பிரசுரிக்கச் செய்திருக்கின்றனர்.
- Vijay Anandh.K
படம்: கிருஷ்ணவேணி பஞ்சாலை
தயாரிப்பு: மின்வெளி மீடியா ஒர்க்ஸ்
இயக்குனர்: தனபால் பத்மநாபன்
இசை: என்.ஆர்.ரஹ்நந்தன்
பாடல்: வைரமுத்து

பல்லவி
ஆலைக்காரி
பஞ்சாலைக்காரி
ஆலைக்காரி
பஞ்சாலைக்காரி
கல்லில் உள்ள சிலைகள் எல்லாம்
உங்கள் சாமி - நூல்
மில்லில் உள்ள எந்திரம் எல்லாம்
எங்கள் சாமி
இதயம் போடும் ஓசைதான் - நம்
உயிரின் சங்கீதம்
எந்திரம் போடும் ஓசைதான்
தொழிலாளியின் சங்கீதம்
இந்த ஆலை என்பது ஆலை அல்ல
ஆலயந்தான்
பூஜைபோடு - ஆயுத
பூஜைபோடு
தொழிலாளி வாழ்க - என்னும்
ஆசையோடு
சரணம் - 1
பெத்த மண்ணை வித்துத் தின்னு
இத்துப் போயி வந்தோம்
பெத்த தாயப் போல நீயே உப்புப் போட்டாயே!
தனித் தனியா நூலா வந்தோம்
துணியா இங்கே ஆனோம்!
மானங் காக்கும் வேலை தந்து
மானங் காத்தாயே
பலசாதிப் பறவை
ஒருகாட்டில் குடியேறும்
அதுபோல நாங்கள் உறவானோம் இங்கே
ஆயுத பூஜை என்பது கூட
மேதினம் போலத்தான்
ஆயுதம் மேலே குங்குமம் வைத்தோம்
செந்நிறம் காணத்தான்
இந்த ஆலை என்பது ஆலை அல்ல
ஆலயந்தான்!
சரணம் - 2
சொந்தம் உள்ள சாதிசனம்
தூரமாகிப் போக
வந்த சனம் சொந்தம் என்னும்
பந்தம் உண்டாச்சே
முள்ளுக்குள்ள வாழ்ந்த வாழ்க்கை
முற்றும் தீர்ந்து போச்சு
மில்லுக்குள்ள வந்தோம்
பஞ்சம் போயே போயாச்சு
மனுசங்க வேர்வை
ஒருவாசம் உண்டாக்கும்
மிஷினுக்கும் கூட
ஒரு வாசம் உண்டு
பஞ்சைக் கொண்டு நூலைக் கண்டோம்
பஞ்சம் போனதுகாண்! - எங்கள்
காலம் வெல்லும் என்னும் கனவு
கண்ணில் தோணுதுகாண்
இந்த ஆலை என்பது ஆலை அல்ல
ஆலயம்தான்!
