a K.Vijay Anandh review
குழந்தைகள் உரிமை என்பதை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட ISR – 5 நிமிடக்குறும்பட போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வான 11 படங்களில் ஒன்று, வாத்சல்யம்.
வடசென்னை பின்னணியில் ஒரு ஆக்ஷன் குறும்படமாக வாத்சல்யத்தை இயக்கியிருக்கிறார் பாலுமகேந்திராவிடம் வித்தை கற்றுகொண்ட பரதமகேந்திரா.
பாய் சொன்னால் யாரைவேண்டுமானாலும் அடித்து துவம்சம் செய்யும் அடியாள் தான் இப்படத்தின் நாயகன், சிலம்பாட்ட வீராங்கனை தன் குழந்தையை ஒரு நாள் அடிக்கப்போக, ஓங்கிய கை நின்றுவிடுகிறது. அது தான் சிறந்த தருணம் என்று, அவனது மனைவி, ஊரையே அடிக்கும் கை இப்ப மட்டும் ஏன் யா நிக்குது, உம்மகளையும் அடியா அடி… என்று அழுதுபுலம்ப, இனிமேல் இந்த கூலிப்படை அடியாள் வேலையை விட்டுவிடுவது என்று முடிவெடுக்கிறான் நாயகன். நெருக்கமான குடியிருப்புகள், கோயில் திருவிழா, துரத்தல்கள் என்று அருமையாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பிரபாகர். நடிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கலாம்.
வாத்சல்யம், தனக்கு வந்தால் தான் எதுவுமே உரைக்கும் என்பதை அடிப்படையாக வைத்து சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You