குழந்தைகள் உரிமை என்பதை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட ISR – 5 நிமிடக்குறும்பட போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வான 11 படங்களில் ஒன்று, நெகிழிப்பூக்கள்.
தமிழ் பெருமான் இயக்கியிருக்கும் இந்த குறும்படத்தின் இறுதி வசனம், இப்படம் பார்க்கும் ஒவ்வொரு மதுப்பிரியரையும் யோசிக்க வைக்கும். என்னை மாதிரி உங்கவீட்டுலயும் குழந்தைங்க இருப்பாங்கள்ளண்ணே.. அப்ப குடிக்காதீங்கண்ணே…
குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சிறுவன், சிறப்பாக நடித்திருக்கிறார். இக்குறும்படத்தில் குப்பை பொறுக்கும் சிறுவனாக வருகிறான். படத்தின் முதல் காட்சியே , குழந்தைகள் உட்பட அனைத்து மனிதர்களுக்குமான அடிப்படையான உரிமைகள் பெற சட்டமியற்றிய அம்பேத்கர் சிலைக்கு முன், கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அந்த சிறுவன், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி காலி பாட்டில்களை சேகரிக்கிறான், தனது பசியுடன் தனது அம்மாவின் பசியையும் போக்க. அங்கே ஆரம்பித்து, கண்மாய் கரையோரம் மது அருந்திக்கொண்டிருப்பவர்கள் உடைத்து போட்ட கண்ணாடி குத்தி காயமடைகிறான், இதுவே, ஒரு செய்திதான். மதுப்பிரியர்களின் அத்துமீறல்.
இக்குறும்படத்தில், கே டி யின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மிகவும் மெச்சத்தகுந்தாக இருந்தது.
நெகிழிப்பூக்கள், நெகிழிகளுக்காவது பணமதிப்பு இருக்கிறது, ஆனால் அடிப்படை உரிமை மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு ? என்கிற ஆழமான கேள்வியை முன்வைக்கிறது.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You