a K.Vijay Anandh review
குழந்தைகள் உரிமை என்பதை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட ISR – 5 நிமிடக்குறும்பட போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வான 11 படங்களில் ஒன்று, வா.
மலையாளப்பட்டி செந்தில் குமார் இயக்கியிருக்கும் வா – குறும்படம், சிறார்களிடம் போதைப்பொருட்கள் வாங்கிவரச்சொல்வதும், கடையில் அவர்களிடம் அதை விற்பதும் சட்டப்படி தவறு என்பதை நினைவூட்டுகிறது.
கதை சொன்னவிதம், மிகவும் அருமை. முதல் ஷாட்டிலேயே எறும்பு ஊர கல்லும் தேயும் என்பதாக சாரை சாரையாக ஒரு பாறையில் எறும்புகள் ஊர்வதை காட்டியவிதமும், 3 நாட்களாக வீட்டிற்கும் கடைக்குமான காட்சிகள் மட்டுமே என்றாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக காட்டும் செந்தில்குமாரின் கேமரா கோணங்களும் அருமை. மாஸ்டர் பிரவித், நான் படிக்கனும் தாத்தா என்று அழுத்தி சொல்லுமிடம் முதல் ஏதுமறியாமல் சிகரெட் வாங்கி செல்லும் ஒவ்வொரு முறையும் இயல்பாக நடித்திருக்கிறார். தருண் ராஜேந்திரனின் இசையும் அருமை.
வசன உச்சரிப்புகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில், காவல்துறை இப்படி தன்னிச்சையாக கண்காணித்து சிறார்களை போதை பொருட்கள் வாங்குபவர்களுக்கு தண்டனை அளிக்க ஆரம்பித்தால், இந்த நிலையை மாற்றிவிடமுடியும்.
ஆபரேஷன் வா, அத்தியவாசியத்தேவை.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You