a K.Vijay Anandh review
நாம என்ன பண்ணினால் பார்ப்பார்கள் என்று கடுமையாக உழைத்த வடிவேலுவை மக்கள் என்றுமே கொண்டாடத்தவறியதில்லை. ஆனால், நாம என்ன பண்ணினாலும் பார்ப்பார்கள் என்பது மாதிரி நாய்சேகர் ரிடர்ன்ஸை கொடுத்திருக்கும் வடிவேலுவுக்கு உரியமரியாதையை கொடுக்கவும் ரசிகர்கள் தவறப்போவதில்லை.
மனோபாலா குடும்பத்தலைவராக கொண்ட ஒரு பிராமண குடும்பத்தை, மிகவும் மோசமாக 10- 15 நிமிடங்களுக்கு சித்தரிக்கும் அந்த அறிமுகக்காட்சியிலேயே வடிவேலு அலுத்துப்போக வைத்துவிடுகிறார்.
அந்த பிளாஷ்பேக், அட்டகாசம், குழந்தைவரம் வேண்டி பைரவர் சன்னிதியில், முறையிடும் வேலராம்மூர்த்திக்கு ஒரு நாய்க்குட்டியுடன் குழந்தைச்செல்வமும் கிடைப்பது அருமை. அதன் பிறகான திரைக்கதையை அமைத்த விதத்தில், மிகப்பெரிய கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குநர் சுராஜ்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
பொன்னியின் செல்வன் போன்ற சாகாவரம் பெற்ற படங்களை தயாரித்துக்கொண்டிருக்கும் வேளையில், லைகா நிறுவனத்திற்கு நாய்சேகர் ரிடர்ன்ஸ் போன்ற படங்கள், ஏதோ திருஷ்டிபோல அமைந்துவிட்டது என்றால் அது மிகையாகாது.